TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு நாளை (09.12.2021) நடைபெறவிருந்த நிலையில் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

TNPSC:

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான TNPSC தேர்வுகள் கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் அரசு பணி வாங்க வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் TNPSC தேர்வு அறிவிப்பு குறித்து எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன் ஒரு பகுதியாக புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு மற்றும் கட்டடக்கலை, திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வுகளை நடத்த திட்டமிட்டு அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தேர்வு நடைபெறும் நாளான நாளை (ஜன.9) தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஞாயிற்றுக்கிழமை பொங்கல் தொகுப்பு?

அதனால் அன்றைய தினம் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் TNPSC தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதில் சிக்கல்கள் ஏற்ப்பட்டது. இதனால் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து முழு ஊரடங்கின் போது TNPSC தேர்வுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. தேர்வுகள் தங்களின் தேர்வு மைய அனுமதி சீட்டை காண்பித்து தேர்வு எழுத செல்லலாம் என்று அரசு தெரிந்திருந்தது. அதனால் திட்டமிட்டபடி TNPSC தேர்வு நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்திருந்தது.

TNPSC Coaching Center Join Now

ஆனால் தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 9ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தேர்வு வரும் 11.01.2022 அன்று நடைபெறும். தேர்வர்கள் தற்போது பதிவிறக்கம் செய்துள்ள அனுமதி சீட்டை பயன்படுத்தி தேர்வை எழுதலாம். மேலும் நாளை (09.01.2022) நடைபெற உள்ள கட்டடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!