TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை விவரங்கள்!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம், தேர்வு முறை விவரங்கள்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம், தேர்வு முறை விவரங்கள்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை விவரங்கள்!

தமிழகத்தில் அமைச்சரவை பணிகள், தட்டச்சாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவியிடங்களுக்கு தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் பாடத்திட்டம், தேர்வு முறை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு TNPSC பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இருப்பினும் கடந்த 2 வருடங்களில் கொரோனா தாக்கம் காரணமாக போட்டி தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கம் தற்போது சற்று ஓய்ந்து வருகிறது. இந்த நிலையில் போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிய நிலையில் தொடர்ந்து குரூப் 4 VAO தேர்வுக்கான அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

சென்னையில் ஊரடங்கு அமல் எதிரொலி – மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

TNPSC தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலப்பாடம் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித்தாளில் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குரூப் 4 க்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் குறிப்பிட்டு உள்ளது. மேலும் குரூப் 4 தேர்வை எழுத குறைந்தபட்ச தகுதி 10ம் வகுப்பு ஆகும். இந்த தேர்வு மூலம் ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சு செய்பவர் (டைப்பிஸ்ட்) ஸ்டெனோ, டைப்பிஸ்ட், கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளது. மேலும் விஏஓ பிரிவில்,கிராம நிர்வாக அலுவலர் பதவி உள்ளது. இந்த தேர்வில் கொள்குறி வினா (OMR ) வகையில் கேள்விகள் இருக்கும்.

பொது அறிவில் 75 வினாக்கள், திறனறிவு மற்றும் புத்திகூர்மை 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் நூறு வினாக்கள் இருக்கும். மொத்தம் 200 மதிப்பெண்கள். 3 மணி நேரம் கால அவகாசம் தரப்படும்.தேர்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட OMR தாளில் பதில்களை குறிக்க வேண்டும். தேர்வை வெற்றிகரமாக நடத்திய பின்னர், தேர்வர்களுக்கு அவர்களின் பதில்களைக் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி விடைகளை வெளியிடுகிறது. இதன்மூலம் ஏதேனும் விடைகளில் தவறு இருந்தால் ஆட்சேபனைகளை மாணவர்கள் எழுப்பலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 4 தேர்வில் சரியான பதில்களுக்கு தலா 1.5 மதிப்பெண் வழங்கப்படும் தவறான பதில்களுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் செய்யப்படாது என TNPSC அறிவித்து உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!