TNPSC குரூப் 4 VAO தேர்வு 2021 – தேர்வு முறைகள், பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தேர்வு முறை பாடத்திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
குரூப் 4:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு சேருவதற்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்துகிறது. ஒவ்வொரு வகை பதவிகளிலும் ஏற்ப வினாக்கள் வடிவமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் நேர்முக தேர்வில் பங்கு பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு இவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. அந்த தேவைகளுக்கேற்ப குருப் 1, குரூப் 2 , குரூப் 4, போன்ற தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளை லட்சக்கணக்கான மக்கள் எழுதுகின்றனர். குரூப் 4 தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த குரூப் 4 தேர்வு கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடமும் இந்த வருடமும் நடத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பட்டால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளையும் அளித்து வருகிறது. இதனால் விரைவில் குரூப் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் இடம்பெறும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.175 பொது அறிவு வினாக்களும் 25- திறனறி வினாக்களும் இடம் பெறும். குரூப் 4 தேர்வில் பெரும்பாலும் வினாக்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்படுகிறது.