TNPSC குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.. தேர்வர்களின் கவனத்திற்கு!
TNPSC ஆணையத்தில் இருந்து குரூப் 4 தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 4:
அரசு வேலை பெற வேண்டும் என்பதை கனவாக கொண்டவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது குரூப் 4 தேர்வாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 10,117 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏராளமானோர் இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தது.
நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 7) வங்கிகளுக்கு விடுமுறை – காரணம் இதுவா? பொதுமக்கள் கவனத்திற்கு!
எனவே குரூப் 4 தேர்வானது 24.07.2022ம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் ஆனது 24.03.2023ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியது. தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பட்டியலான விண்ணப்பதாரர்கள் 13.04.2023 முதல் 05.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதாவது அருகில் உள்ள அரசு இசேவை மையத்தில் சென்று தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.