TNPSC குரூப் 3, 4, 7b, 8 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ்மொழி தகுதித்தேர்வு பாடத்திட்டம்!
தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தும் குரூப்-3, 4, 7- பி, 8 போன்ற பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
TNPSC:
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம்(TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களை பெருகின்றனர் . இந்த போட்டித்தேர்வுகள் அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு குரூப் 1, குரூப் 2, குரூப் 3,குரூப் 4 & VAO, 7b, 8 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்களாக போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. அதனால் தற்போது 2022ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதி முழு ஊரடங்கு அமல் – பாதிக்கப்படப் போவது யார்? ஒரு அலசல்!
அதில் நடப்பாண்டு 22 வகையான போட்டித் தேர்வுகளை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையானோர் எழுத கூடிய குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு 2022 ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என்று TNPSC தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து TNPSC தேர்வில் புதிய மாற்றமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு துறைகளில் 100% தமிழக இளைஞர்களை நியமிக்கும் நோக்கில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியம்.
அப்போது தான் தேர்வின் பிற பாட வினாக்கள் மதிப்பீடு செய்யப்படும் அதாவது தமிழ் மொழி தகுதித் தேர்வு மதிப்பீட்டு தகுதித் தேர்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குரூப் 1, குரூப்-2 மற்றும் 2 ஏ, அதனை தொடர்ந்து 3, 4, 7b, 8 போன்ற அனைத்து தேர்வுக்கான பாடதிட்டங்களும் மாற்றம் செய்யப்பட்ட திருத்தத்தப்பட்ட தேர்வு பாடத்திட்டம் TNPSC யின் அதிகார பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. TNPSC தேர்வு எழுத உள்ளோர் இணையத்தளம் வாயிலாக பாடத்திட்டங்களை பார்த்து தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.