TNPSC குரூப் 2 தேர்வெழுத திட்டமிடுவோர் கவனத்திற்கு – பதவிகள், கல்வித்தகுதி, வயது வரம்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த குரூப் 2 தேர்வுக்கான பதவிகள், பாடத்திட்டம், வயது வரம்பு, கல்வித்தகுதி, தேர்வு முறை உள்ளிட்ட முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
குரூப் 2 தேர்வு:
தமிழகத்தில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group 2 தேர்வின் மூலம் காலியாக உள்ள 5,831 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Group 2 தேர்விற்கான பதவி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
பதவிகள்:
நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகள்:
நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர்(Sub Registrar), சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர்(Assistant Inspector of Labour), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்(Junior Employment Officer), தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகின்றன.
நேர்முகத்தேர்வு அற்ற பதவிகள்:
உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு மட்டும் கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.
TNPSC Coaching Center Join Now
வயது வரம்பு:
பொதுப்பிரிவினருக்கு 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 40 வயது வரை தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை:
முதல்நிலை தேர்வு , முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் பணி தேர்வு செய்யப்படும். மேலும் நேர்முகத்தேர்வு அல்லாத சில பதவிகளும் உண்டு.
முதல்நிலை தேர்வு:
இந்த முதல்நிலை தேர்வில் பொது அறிவு பகுதியில் பட்டப்படிப்பு தரத்தில் 175 வினாக்களும், 10ம் வகுப்பு தரத்தில் 25 கணக்குகளும் கேட்கப்படும். பொதுஅறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், பண்பாடு, தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறி வினாக்கள் இடம்பெறும்.
முதன்மை தேர்வு:
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதன்மை தேர்வில் பகுதி அ மற்றும் ஆ என இரண்டு பகுதிகள் உள்ளது. தேர்வுக்கான காலம் 3 மணி நேரங்கள்.
பகுதி அ:
இந்த பகுதியில் மொத்தம் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் என நான்கு வினாக்கள் இடம்பெறும். ஒரு வினாவிற்கு 25 மதிப்பெண் வீதம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படும். குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பகுதி ஆ மதிப்பீடு செய்யப்படும்.
டிசம்பர் 31 வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
பகுதி ஆ:
இந்த பகுதியில் மொத்தம் 10 வினாக்கள் கேட்கப்படும். அதில் ஒரு வினாவிற்கு 20 மதிப்பெண் வீதம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அதில் சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் மற்றும் திருக்குறளில் சில தலைப்புகளில் இருந்து கட்டுரை எழுதுதல், அலுவல் சார்ந்த கடிதம் எழுதுதல் உள்ளிட்ட தலைப்புகளில் வினாக்கள் இடம்பெறும்.
தெரிவு முறை:
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு முதன்மை தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தெரிவு நடத்தப்படும்.