டிசம்பர் 31 வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா ஒமிக்ரான் வழக்குகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
புதிய கட்டுப்பாடுகள்
மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மஹாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் கண்டறியப்பட்ட இவ்வகை ஒமிக்ரான் வைரஸ் தொற்று, மஹாராஷ்ரா மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த அடிப்படையில் இதுவரை 32 பேர் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக பாசிட்டிவ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!
இப்போது மாநிலம் முழுவதும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், மும்பை மாநகரம் முழுவதும் இன்று (டிச.16) முதல் டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு விதித்துள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு உலகில் வேகமாகப் பரவி வரும் சூழலில் வரும் ஜனவரி மாதத்தில் இந்த நோய்த்தொற்றின் வழக்குகள் கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் அதிகரிக்கும் என்று மூத்த பொது சுகாதாரத் துறை அதிகாரி கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் தெரிவித்துள்ளார்.
இப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPc) பிரிவு 144ன் கீழ் மும்பை மாநகரத்தின் ஒரே இடத்தில் மக்கள் பெரிய அளவில் கூடுவதையும், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்று (டிச.16) முதல் புத்தாண்டு வரை அமலில் இருக்கும் வகையில் சில புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,
- எந்தவொரு நிகழ்விலும் ஒரு அரங்கில் 50 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
- கடை, ஸ்தாபனம், வணிக வளாகம், நிகழ்வு மற்றும் ஒன்று கூடல் ஆகியவை முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்.
- அத்தகைய இடங்களுக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்படிருக்க வேண்டும்.
தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – ஆயத்த பணிகள் தொடக்கம்!
- அனைத்து பொது போக்குவரத்தையும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- மஹாராஷ்டிராவிற்கு வரும் பயணிகள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
- 72 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் RT-PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
- மூடிய அல்லது திறந்த வெளியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றால், அதன் மொத்த திறனில் 50 சதவிகிதம் வரை மக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டினால், அது குறித்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.