TNPSC குரூப் 1 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – மே மாதம் தேர்வு நடத்த திட்டம்!
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. இதில் குரூப் 2, குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 1 தேர்வு குறித்து TNPSCயின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
குரூப் 1 தேர்வு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது.
CSK அணியில் இன்னும் 10 வருடங்கள் விளையாடுவேன் – ரவீந்திர ஜடேஜா ட்வீட்! ரசிகர்கள் உற்சாகம்!
அத்துடன் இதில் பிப்ரவரி மாதத்தில் குரூப் 2,2ஏ தேர்வு குறித்த அறிவிப்பும் அத்துடன் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 1 தேர்வு குறித்து TNPSCயின் தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இதில், தமிழகத்தில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான துறைத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அத்துடன் புதிய நடைமுறையாக பிப்ரவரி 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மற்றும் 7, 8ம் தேதி வரை ஆன்லைன் முறையில் கணினி வாயிலாக நடத்தப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு தொடரும் – திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!
அத்துடன் பிப்ரவரி 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சர்வே மற்றும் வருவாய்த் துறைகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறுகிறது. மேலும் அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலமாக ஸ்கேன் செய்யப்பட்டு நேர்மையான முறையில் திருத்தம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு TNPSC தேர்வாணையம் மூலமாக 32 வகையான தேர்வுகள் நடைபெற உள்ளது என்றும் கூறியுள்ளார். இதையடுத்து குரூப் 1 தேர்வு வருகிற மே மாதம் நடத்த உள்ளதாக திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதனால் போட்டி தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.