மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு தொடரும் – திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!
மத்தியப் பிரதேச அரசு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை தளர்த்தி இரவு நேர ஊரடங்கை மட்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது. மேலும் திருமணங்களில் ஒன்றுகூடுவதற்கான தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீக்கம்
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு, மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று (பிப்.4) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மாநில உள்துறை அமைச்சகம் திருமண நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடுகளை நீக்கி புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு முன்னதாக, திருமணங்களில் கலந்து கொள்ள மொத்த விருந்தினர்களின் எண்ணிக்கை 250 ஆக இருந்தது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் இன்று (பிப்.5) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – முக்கிய அறிவிப்பு!
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்றின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திருமணங்களுக்கு 250 விருந்தினர்களை மட்டுமே அனுமதிக்கும் முந்தைய முடிவை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. புதிய விதிகளின் படி, திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வரம்புகள் நீக்கப்பட்டுள்ளது. தவிர அரசியல், சமூக அல்லது மத வழிபாட்டு கூட்டங்களில் 250 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்.19க்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு? வெளியான ஷாக் தகவல்! அரசின் முடிவு என்ன?
இதற்கிடையில் மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதும் தற்போது இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருந்து வரும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இறுதிச் சடங்குகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,516 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.