TNPSC குரூப் 1 தேர்வில் திறமையான மதிப்பீட்டாளர்களுக்கு பணி – அரசு அறிவிப்பு!
TNPSC குரூப் 1 தேர்வில் திறமையான மதிப்பீட்டாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
மதிப்பீட்டாளர்களுக்கு பணி:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருகிற நவம்பர் 19ம் தேதி காலை 9.30 AM முதல் 12.30 PM மணிவரை குரூப் 1 தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வர்கள் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில் தேவையான ஏற்பாடுகளை TNPSC ஆணையம் செய்து வருகிறது. தமிழகத்தில் அரசு வேலை பெற தமிழ் மொழி தேர்வுத்தாளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்கிற விதி அமலில் உள்ளது. இந்நிலையில் குரூப் 1 தேர்வை தமிழ் வழியில் எழுதும் மாணவர்களின் நலனை காக்கும் நோக்கில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சக்திராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
Exams Daily Mobile App Download
அந்த மனுவில், ‘தமிழில் எழுதப்படும் குரூப் 1 தேர்வுத்தாள்களை தமிழ் வழியில் படித்தவர்களே மதிப்பீடு செய்ய வேண்டும், இப்பணி திறமையான மதிப்பீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என கோரப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வில் தமிழ் வழியில் எழுதும் விடைத்தாள்களை திறமையான மதிப்பீட்டாளர்கள் மதிப்பிடுவதை தேர்வாணையம் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இதனை நம்ப வேண்டாம்..முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் மட்டுமே விடைத்தாள்களை திருத்தும் தகுதி பெற்றிருப்பர் என்கிற அவசியமில்லை, மதிப்பீட்டாளர் ஆங்கில வழியில் படித்திருந்து சரியாக மதிப்பிடும் திறன்களை பெற்றிருக்கலாம் எனக்கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.