CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இதனை நம்ப வேண்டாம்..முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் மத்திய கல்வி வாரியமான CBSE 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அண்மையில் வெளியிட்டது. தேர்வுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வெளியாகி வரும் தேர்வு கால அட்டவணை குறித்து CBSE விளக்கம் அளித்துள்ளது.
கால அட்டவணை:
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை இரண்டு கட்டங்களாக செமஸ்டர் முறையில் நடத்தியது. மேலும் பல நாட்களாக மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் வீட்டில் இருந்தமையால் பாடத்தை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
Exams Daily Mobile App Download
அதனால் மாணவர்களின் பாட சுமையை குறைக்க தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. கொள் குறி வகையில் 50% பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் கொரோனா தாக்கம் குறைந்து வழக்கம் போல தேர்வுகள் நடைபெற்று வருவதால் 2022- 2023 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு நேரடி முறையில் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 740 ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள் விரைவில் தொடக்கம் – அரசின் திட்டம்!
Follow our Instagram for more Latest Updates
ஆனால் பாட வாரியான தேர்வு கால அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் CBSE 12ம் வகுப்பு தேர்வு தேதி தாள் இணையதளத்தில் தற்போது பரவி வருகிறது. இது குறித்த விளக்கம் அளித்த CBSE தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை போலியானது என்று தெரிவித்துள்ளார். மேலும் இதனை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.