TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – பிப்.22 வரை அஞ்சல் வழியில் மாதிரித்தேர்வு!!
தமிழகத்தில் TNPSC குரூப் 2, 2A முதன்மை தேர்வு வரும் பிப்ரவரி 25ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள தேர்வர்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் வழியில் மாதிரித்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2:
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 2,2A தேர்வு கடந்த 2022 மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.
IBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 – இன்று வெளியீடு!
சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த குரூப் 2 முதல்நிலை தேர்வின் முடிவுகள் கடந்த 2022 நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வு பிப்ரவரி 25ம் தேதி நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இப்போதிலிருந்தே குரூப் 2 தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் கிராமப்புறங்களில் இருந்து தேர்வுக்கு தயாராகும் நபர்கள் மற்றும் தங்களாவே தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு உதவ கூடிய வகையில் TNPSC டிராக் என்ற தனியார் யூடியூப் சேனல் வாயிலாக மாதிரித்தேர்வு நடைபெறவுள்ளது. நாளை (ஜன. 25) முதல் பிப்( 22) வரை அஞ்சல் வழியில் மாதிரி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 9003490650 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.