சிக்கலில் TNPSC தேர்வர்கள்.. 2023ல் கேள்விக்குறியான வேலைவாய்ப்புகள் – குரூப் 1, 2 நடத்தப்படுமா?
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அண்மையில் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கால அட்டவணையை வெளியிட்டது. தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த அட்டவணை அனைவருக்கும் அதிர்ச்சியை மட்டுமே அளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
TNPSC தேர்வுகள்:
கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்பு கொரோனாவால் வெளியாகவில்லை. இந்த ஆண்டில் தான் சற்று இயல்புநிலை திரும்பி தேர்வுகள் அறிவிக்கப்பட்டது போன்று நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடக்காததால் வரும் ஆண்டு கண்டிப்பாக அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.
Exams Daily Mobile App Download
ஆனால் TNPSC அண்மையில் வெளியிட்ட வருடாந்திர அட்டவணையில் பட்டதாரிகள் அதிகம் எதிர்பார்த்த குரூப் 1, 2 தேர்வுகளின் அறிவிப்பு பற்றிய விவரங்கள் இடம் பெறவில்லை. இது கடும் அதிதிருப்தியை தேர்வர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. குரூப் 4 அறிவிப்பின் கீழ் எவ்வளவு பணியிடங்கள் நிரப்படவுள்ளன என்ற தோராய காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் தெரிவிக்கப்படவில்லை.
அதிர்ச்சி செய்தி! ஆதார் – மின் இணைப்பு பணிகளில் 2.5 லட்சம் பதிவுகள் ரத்து – மின்வாரியம் எச்சரிக்கை!
Follow our Instagram for more Latest Updates
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 12 ஆயிரத்திற்கும் மேலான காலிப்பணியிடங்கள் TNPSCன் மூலம் நிரப்பப்படும். ஆனால் 2023ல் அது கேள்விக்குறியாகி உள்ளது. தலைமை செயலகம் உள்பட தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவை எல்லாம் எப்போது நிரப்பப்படும் என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது.