தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் முக்கிய வேலை – நேர்காணல் மட்டுமே..!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள மருந்தாளுனர் எனும் Pharmacist பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TNHRCE Palani |
பணியின் பெயர் | Pharmacist |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE Palani காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Pharmacist பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
TNHRCE Palani கல்வித் தகுதி:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
TNHRCE Palani வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.07.2022 ம் தேதியின் படி, கட்டாயம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNHRCE Palani ஊதியத் தொகை:
மேற்கண்ட பணிகளில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
TNHRCE Palani தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபர்களுக்கு மட்டும் நேரடியாக நேர்காணல் (Interview) நடைபெறும் என்றும், அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
சிறந்த coaching centre – Join Now
TNHRCE Palani விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து மதத்தினர் மட்டும், இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு 08.07.2022 ம் தேதி மாலை 05.45 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என அறிவித்துள்ளது.