தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் ரூ.15,000/- சம்பளத்தில் அரசு வேலை !
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போவதாக தற்போது வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் (சித்தா), பாதுகாவலர், சுகாதாரப்பணியாளர் ஆகிய பணிகள் காலியாக உள்ளன எனவும், இந்த பணிக்காக மொத்தமாக 19 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி (PMT) |
பணியின் பெயர் | சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் (சித்தா), பாதுகாவலர், சுகாதாரப்பணியாளர் |
பணியிடங்கள் | 19 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
PMT காலிப்பணியிடங்கள்:
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பின்வரும் பணிகள் காலியாக உள்ளன.
- சித்த மருத்துவர்- 3
- செவிலியர் – 5
- மருந்தாளுனர் (சித்தா) – 3
- பாதுகாவலர் – 4
- சுகாதாரப்பணியாளர் – 4
சுவாமி திருக்கோயில் பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
- சித்த மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் சித்த மருத்துவத்தில் MD படிப்பை தமிழ்நாடு சித்தா M.G.R பல்கலைக்கழத்தில் படித்தவராக இருக்க வேண்டும்.
- செவிலியர் (Nurse) பணிக்கு B.Sc Nurshing படித்தவராக இருக்க வேண்டும்.
- மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பை தமிழ்நாடு சித்தா M.G.R பல்கலைக்கழத்தில் படித்தவராக இருக்க வேண்டும்.
- பாதுகாவலர், சுகாதாரப்பணியாளர் (Sweeper) பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது ஆகும்.
தண்டாயுதபாணி சுவாமி பணிக்கான தகுதிகள்:
- விண்ணப்பதாரர் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் தகவலை அறிவிப்பில் காணலாம்.
PMT வயது வரம்பு:
விண்ணப்பதாரர் ஜூலை 2022 நாள் கணக்கின் படி 18 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.
வருமானம்:
விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ. 8,000/- முதல் ரூ. 50,000/- வரை வருமானமாக பெறுவார்.
PMT தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
விண்ணப்பிக்கும் விதம்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 31.3.2022 கடைசி நாள் மாலை 5.45 மணிக்குள் தபால் செய்ய வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில், பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம்.