தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் மின்வாரிய பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்வாரியம் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 100 சதவீத வாக்குப்பதிவை பெறும் நோக்கில் ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநிலத்தவர்கள்!!
அன்றைய தினம் அனைத்து தனியார், பொதுத்துறை நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் தலைமை செயலாளர் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் அதனை பின்பற்றாத நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணியாளர்களான மின்வாரிய ஊழியர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள அத்தியாவசிய சேவை அலகுகள் மற்றும் விநியோக அமைப்புகள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.