TNCSC நிறுவனத்தில் 527 காலிப்பணியிடங்கள் – ஜூலை 8 விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. Assistant, Record Clerk & Security ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
TNCSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷனில் Assistant பணிக்கு 189 பணியிடமும், Record Clerk பணிக்கு என 159 பணியிடமும், Security பணிக்கு என 179 பணியிடமும் என மொத்தமாக 527 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Record Clerk பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Agriculture and Engineering பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
- Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Security பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். BC / BC (M) / MBC – 2 வருடங்கள் மற்றும் SC / SC (A) / ST – 5 வருடங்கள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
- விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் Record Clerk பணிக்கு ரூ.8,784/- ஊதியம் என்றும், Assistant மற்றும் Security பணிக்கு ரூ.8,717/- ஊதியம் என்றும் மாத ஊதியம் பெறுவார்கள்.
- இப்பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
TNCSC விண்ணப்பிக்கும் விதம்:
தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷன் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் (08.07.2022) மட்டுமே கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.