தமிழக அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – 304 காலிப்பணியிடங்கள்!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து நாகப்பட்டின மாவட்ட அலுவலகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக கடந்த மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் இப்பணிகளுக்கு என 304 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNCSC தகுதி விவரங்கள்:
- விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பருவகால உதவுபவர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், பருவகால காவலர் பணிக்கு அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சியும்பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
TNCSC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
- பருவகால உதவுபவர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
- பருவகால காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 10.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.