தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு காலநிலை இப்படிதான் இருக்கும் – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவ கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பநிலை குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர் காலநிலை முடிவடைந்ததையடுத்து தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் வெப்பநிலை கடந்த நாட்களை விட தற்போது அதிகரித்து காணப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் இணையதள வசதி ஏற்பாடு – கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை!
Follow our Instagram for more Latest Updates
வரும் நாட்களில் மேலும் வெப்பநிலை உயரும் என்றும் ஏப்ரல் மாத இறுதியில் உச்சம் அடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவையின் காலநிலை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (20.02.2023) வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் பிப். 20 முதல் 24ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க கூடும். அதிகபட்சம் 32 – 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்க கூடும் என்று வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.