தமிழக அரசு பள்ளிகளில் இணையதள வசதி ஏற்பாடு – கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் அரவக்குறிச்சியில் இயங்கி வரும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பல்வேறு ஆன்லைன் வேலைகளை செய்ய இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
இணையதள வசதி
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி வழங்க வேண்டும் என அரசு பல திட்டங்களையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் அரவக்குறிச்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கல்வித்துறை செயல்படுத்தும் பல்வேறு ஆன்லைன் வேலைகளை செய்ய இணையதள வசதி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், இணையதள வசதி உடனே செய்து கொடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
Twitterல் ப்ளூ டிக் வைத்துள்ளவரா…மார்ச் 20 முதல் Two-Factor Authentication – எளிய வழிமுறைகள் இதோ!
மேலும் இது குறித்து கல்வித்துறை வெளியிட்ட உத்தரவின் படி, அனைத்து அரசுப் பள்ளிகளும் எமிஸ் எனப்படும் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டு மாணவர்களின் வருகை, ஆசிரியர் வருகை, தமிழ் வழி சான்றிதழ், மாணவர்களுக்கு தரப்படும் விலையில்லா புத்தகங்கள், காலணிகள், சீருடைகள் ஆகியவை இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
இந்த பணிகளை செய்ய இணையதள வசதியோ, கணினி வசதியோ இல்லாததால் பள்ளிகள் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், மாணவர்களுக்கு கணினி வழி நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாகவும், ஆசிரியர்கள் அவர்களது மொபைல் மூலம் இந்த செயல்பாடுகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உடனே இந்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.