தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் 25% குறைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் நீண்ட தூர பேருந்து சேவைகளை 25 சதவீதம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் நிறுத்தம்:
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய முக்கிய இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக காணப்படுகிறது. இதனால் வெளியூர் செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் உள்ளது. பயணிகள் இல்லாமல் வெறும் பேருந்துகளாக இயங்கி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல தனியார், ஆம்னி பேருந்துகளுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. மேலும் குளிர்சாதன வசதியுடைய பேருந்துகளில் கொரோனா எளிதாக பரவக்கூடும் என்பதால் மக்கள் அவ்வகை பேருந்துகளை தவிர்த்து வருகின்றனர். பேருந்துகளில் பயணிகள் வருகை குறைவாக காணப்படுவதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது. இதனால் நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
தொடர்ந்து பயணிகள் வருகை குறைவாக இருந்தால் கூடுதல் பேருந்துகளை நிறுத்துவது குறித்து மேலும் முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல தனியார் பேருந்து நிறுவனங்களுக்கும் போதிய வருவாய் இல்லாததால் அவர்களும் பேருந்து எண்ணிக்கையை குறைத்துள்ளனர். இந்நிலையில் வருவாய் குறைவை ஈட்டும் வகையில் தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் பஸ் கட்டணத்தை உயர்த்துதல், பஸ்கள் மீதான வரி சேவைகளையும் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.