ஆசிரியர் தகுதித்தேர்வு வயது வரம்பு ரத்து – முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை!!
வயது வரம்பு குறைப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு வயது வரம்பை 40 ஆக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு முன்னர் தமிழகத்தை பொறுத்த வரையில் ஆசிரியர் பணிக்கு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றால் அவருக்கு ஓராண்டு பணி நிறைவு செய்யும் வயது இருந்தால் போதுமானதாகும்.
பிப்.,20ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!!
அதன்படி தமிழகத்தில் பணி ஓய்வு பெறுவதற்கு 59 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 58 ஆக உயர்த்தாமல் அரசு 40 ஆக குறைத்துள்ளது. இதனால் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு வந்தது.
பொதுக்குழு கூட்டம்:
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்வு நடந்தது.
இக்கூட்டத்தில் பள்ளி வேலை நாட்கள் 6 ஆக இருப்பதால் மாணவர்கள் மனதளவில் சோர்வடைந்துள்ளனர். இதனால் பள்ளியின் வேலை நாட்களை 5 ஆக குறைக்க வேண்டும். மேலும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 40 ஆக குறைக்கப்பட்டுள்ள வயது வரம்பினை ரத்து செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்