மாநகராட்சி அலுவலக காலிப்பணியிடங்கள் .. மாநில சீனியாரிட்டி அமல் – புதிய விதிகள்!
தமிழக மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் நியமனம் குறித்து புதிய விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது பற்றி இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்:
தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள மாநகராட்சி காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. இந்நிலையில், சென்னையை தவிர்த்து மற்ற 20 மாநகராட்சிகளிலும் அலுவலக காலியிடத்தை நிரப்புவதற்கான அரசின் ஆணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பல்வேறு அறிவிப்புகள் மிகவும் புதியதாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி, ஏற்கனவே இருந்த 20 பதவிகள் நீக்கம் செய்யப்பட்டு, மேலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அலுவலர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களை வேறு மாநகராட்சிக்கு பணி மாறுதல் செய்யவும், தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளரை நியமிக்கவும் அதில் உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், மாநில சீனியாரிட்டி படி அனைத்து மாநகராட்சிகளிலும் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
மெட்டா & ட்விட்டர் ஒதுக்கிய ஊழியர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு – மாஸ் காட்டும் டாடா நிறுவனம்!
Exams Daily Mobile App Download
இதனால், காலியிடங்களுக்கான பதவி உயர்வு மாநில சீனியாரிட்டி படி நியமிக்கப்படுவதற்கு முன்பாக நடக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. குறிப்பாக,பணிகள் விதிகள் தொடர்பாக அரசு புதிய விதிகள் அமல்படுத்த உள்ளதால், நீக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.