மெட்டா & ட்விட்டர் ஒதுக்கிய ஊழியர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு – மாஸ் காட்டும் டாடா நிறுவனம்!
உலக பொருளாதார சிக்கல் நிலையை சமாளிக்க பல நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், அதுபோல் பணியை இழந்தவர்களுக்கு டாடா சூப்பர் வாய்ப்பை அளித்துள்ளது.
டாடா நிறுவனம்:
ஐடி துறையை சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவிலான இழப்புகளை சந்தித்து வருகிறது. மேலும், ஐடி துறைக்கான வாய்ப்புகள் குறைந்து வருமானம் சரிவை சந்துள்ளதாகவும், இதனை சமாளிக்க புதிய பணியாளர்கள் நியமனத்தை நிறுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள ஊழியர்கள் பணி நீக்கமும் செய்யப்படுகிறார்கள். இந்த நடவடிக்கை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி – வலுக்கும் கோரிக்கை!
Exams Daily Mobile App Download
அதிகபட்சமாக மெட்டா 11,000 ஊழியர்களையும், ட்விட்டர் 3,700 ஊழியர்களையும் பணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களுக்கு மெட்டா மற்றும் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை நியமனம் செய்ய உள்ளது. இவர்களின் மூலம் டாடா ஆட்டோமேட்டிக் கார்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.