தமிழகத்தில் 5 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, ஊரடங்கு தளர்வுகள் – முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகளை தவிர கூடுதல் தளர்வுகள் அமல்படுவதுவது குறித்தும், 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகளை தவிர கூடுதல் தளர்வுகள் அமல்படுவதுவது குறித்தும், 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. நிலைமையை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, நிபா வைரஸ் தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
TN பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் பொது மக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் எனவும், கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக வெள்ளி சனி ஞாயிற்று கிழமைகளில் கோவில்கள் மூடப்பட உள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் 9, 10, 11, 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் சுழற்சி முறையில் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள், நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, நிதி துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போவது யார்? MI vs PBK இன்று மோதல்!
இந்த கூட்டத்தில், கொரோனா நோய் தொற்று பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய் தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் ஊரடங்கை நீடிப்பது குறித்தும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அவ்வாறு பள்ளிகள் திறந்தால் என்ன மாதிரியான வழிமுறைகளை வகுக்கலாம். சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவில்கள் வெள்ளி சனி ஞாயிறு திங்களில் மூடப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை விலக்கி கொள்ள வேண்டும் என அனைத்து மத தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் குற்றாலம், பாபநாசம், கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள அருவிகள் உள்ளிட்டவை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மேலும் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.