தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

0
தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு - பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு - பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் பல்வேறு எதிர்பார்ப்புகளை புகுத்தி வருகின்றனர்.

எதிர்பார்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது நோய் தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பதால் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றுவது முக்கியமாகக் கருதப்படுகிறது. இது குறித்த விதிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – மாநில வாரியான விவரங்கள்!

ஒரு வகுப்பறையில், ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; ஒவ்வொரு மாணவருக்கும் இடையே 6 அடி இடைவெளி அவசியம்

பள்ளிகளில் சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்பது போன்ற மட்டகிஹியம் என இரண்டு பிரிவுகளாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை இயக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது

இந்த ஆண்டு பொதுத் தேர்வெழுதும் அல்லது அடுத்த ஆண்டு பொதுத் தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒரேமாதிரியான கருத்தையே முன்வைக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால், மாணவர்களின் கற்றல் திறன் குறைந்திருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டால்தான் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். வகுப்பில் பாடம் நடத்தும் போது கவனிப்பதைப் போல ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் கவனிப்பதில்லை, அதுபோலவே படிப்புக்கு அதிக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. பள்ளிகள் திறக்கப்பட்டால் நிச்சயம் அந்த நிலை மாறும் என்று பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளுக்கான தனி வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும்போது, கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து குறித்து ஊரக மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என தமிழ்நாடு மாணவர்கள், பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் எஸ். அருமைநாதன் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் திறக்கப்பட்டால், பாடங்கள் குறித்து ஆசிரியர்களிடம் நேரடியாக சந்தேகங்களை எழுப்பி விளக்கங்களைப் பெறலாம், பள்ளித் தோழர்களுடன் இணைந்து படிக்கலாம், சக நண்பர்களைப் பார்க்கலாம் என்றும் மாணவர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இது போன்ற ஏராளமான எதிர்பார்ப்புகள் மக்களிடையே நிலவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!