நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – மாநில வாரியான விவரங்கள்!
கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் நாடு முழுவதும் மாநில வாரியாக கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் மீண்டும் திறப்பது குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
கொரோனா தொற்றின் 2ம் அலை நாடு முழுவதும் குறைந்து உள்ளது. இதனால் பல மாநில அரசுகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புக்களை தொடங்குவது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் மீண்டும் கல்லூரிகளை திறக்க இருப்பதாக மேற்கு வங்கம் போன்ற ஒரு சில அரசுகள் அறிவித்தாலும், உத்தரகண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கல்லூரிகள் திறப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி நேரில் வர வேண்டாம்!
இருப்பினும், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, கோவிட் -19 தொடர்பான பல பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பல மாநில அரசுகள் தங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் நேரடி வகுப்புகளுக்கு முன்னதாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மாநில வாரியாக கல்லூரிகள் திறக்கும் விவரம்:
ஒடிசா:
ஒடிசா மாநிலத்தில், ஏற்கனவே ஆகஸ்ட் 16 முதல் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு முதுகலை மற்றும் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
உத்தரகாண்ட்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோவிட் -19 ன் இரண்டாவது அலை காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் தொடங்க மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், துர்கா பூஜை விடுமுறைக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்றும், மாற்று நாட்களில் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவா:
அனைத்து நெறிமுறைகளுடன் மாணவர்களுக்கு ஆஃப்லைன் வகுப்புகளை நடத்த உயர் கல்வி நிறுவனங்களை அரசு அனுமதித்துள்ளது.
டெல்லி:
அறிவியல் பல்கலைக்கழக மாணவர்களுக்காக டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளை மீண்டும் திறக்க டெல்லி பல்கலைக்கழகம் முன்னதாக அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்னும் வளாகங்களில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பது பற்றி அறிவிக்க வில்லை.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் 50% மாணவர்களுடன் மீண்டும் நேரடி வகுப்புகளை தொடங்க உள்ளது.