தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை – கனமழை எதிரொலி! ஆட்சியரின் உத்தரவு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தற்போது மாண்டாஸ் புயல் உருவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று வலுப்பெற்று புயலாக மாறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி இன்று புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் சூறாவளி காற்று அதி வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நான் கருதி வேலூர் மாவட்டத்தில் இன்று(டிச.08) மதியம் மற்றும் நாளை(டிச 09) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இன்றே (டிச. 8) கடைசி நாள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
தற்போது நிலவும் இந்த புயல் நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடிய பலத்த காற்றுடன் கரையைக் கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.