பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது ! – அமைச்சர் அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவர்க்கும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொலைக்காட்சி மூலமாக அடுத்த கல்வி ஆண்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டு உள்ளது. வரும் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து பாடம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது .
பள்ளிகள் திறப்பிற்கு தாமதம் ஏற்படுவதால் பள்ளி பாடத்திட்டத்தில் 40% குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முன்னதாக அறிவித்து இருந்தார்.
சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது !
இந்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் உள்ளன என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்