தமிழக பள்ளிகளில் 100% இருக்கைக்கு அனுமதி – ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!!

0
தமிழக பள்ளிகளில் 100% இருக்கைக்கு அனுமதி - ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழக பள்ளிகளில் 100% இருக்கைக்கு அனுமதி - ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழக பள்ளிகளில் 100% இருக்கைக்கு அனுமதி – ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!! 

தமிழகத்தில் திரையரங்கம் மற்றும் பேருந்துகளில் உள்ளதை போலவே பள்ளிகளிலும் 100% இருக்கைகளை பயன்படுத்தும் வகையில் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

ஊரடங்கு:

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், பொது நிகழ்ச்சிகள், திரையரங்கம், பொது போக்குவரத்து போன்ற அனைத்தும் செயல்படாத நிலையில் இருந்தது. பொது மக்கள் வெளியிடங்களுக்கு அவசியமின்றி வரக்கூடாது என்று பல விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தது.

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் தொடக்கம்!!!

பள்ளிகள் திறப்பு:

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பள்ளிகள் முதல் கட்டமாக திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இதனால் ஜனவரி 19ம் தேதி 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டது. பின்னர் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அரசு, பள்ளிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை முன்னதாகவே வழங்கியுள்ளது. அதன்படி, மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் வகுப்பறையில் 50% மாணவர்கள் மட்டுமே அதிகபட்சமாக அனுமதிக்க வேண்டும். இதனால் பள்ளிகள் ஷிப்ட் முறையில் மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்துகிறது. இருந்தும் பள்ளிகளில் வகுப்பறைக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை:

கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்டது. தினசரி நிகழ்வுகள் அனைத்தும் சாதாரணமாக நடக்க தொடங்கி விட்டது. ஊரடங்கின் போது அரசு விதித்த விதிகள் அனைத்தும் படிப்படியாக தகர்க்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும். பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே கொரோனா பாதுகாப்பு விதிகளை தளர்த்தி அனைத்து வகுப்புகளையும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!