தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – நாளை அறிக்கை தாக்கல்!
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் தேதி குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
பள்ளி திறப்பு:
நாடு முழுவதும் 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவ தொடங்கியது. அதனியா தொடர்ந்து மார்ச் மாதம் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியது. கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவும் விகிதம் படிப்படியாக குறைய தொடங்கியது.
தமிழகத்தில் செப்.30ம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுகை போரட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
பள்ளிகள் திறக்கபடாத நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருப்தி அடையாத நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். நோய் தாக்கம் குறைந்ததன் காரணமாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ், ஆனால் தேர்வுகள் உண்டு – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே மாணவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது பற்றிய அறிக்கையை முதல்வரிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளோம் என கூறியுள்ளார். 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், 1 முதல் 8ம் வகுப்பு வரையும் பள்ளிகளை திறக்கலாமா என ஆலோசித்தோம் எனவும் கூறினார்.