அதிவிரைவில் பள்ளிகள் திறப்பு ?! – அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை !!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது மற்றும் பாடத்திட்டம் குறைப்பது போன்ற பல்வேறு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு என தமிழக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பள்ளிகள் திறப்பு !!
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ப;ல்வேறு தளர்வுகள் அறிவித்த பின்னரும் பள்ளிகள் திறப்பு மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமலேயே உள்ளது. அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புங்கள் வழியாக நடைபெற்று வருகிறது.
செப் 21 முதல் மேல்நிலை வகுப்புகள் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அது குறித்து தமிழகத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதன் காரணமாக அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 10 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாம் என அரசு ஆராய்வதாக தெரிகிறது.
அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை !
பள்ளிகளை திறப்பது பற்றி சுகாதாரத்துறையிடம் வழிகாட்டுதல்கள் பெற்று மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதன் பிறகு வகுப்புகள் தொடங்கலாம் என விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறப்பு தேதியினை முதல்வரிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்ற பின்னர் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. எனவே தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்