பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை !! – விரைவில் தேதி வெளியாக வாய்ப்பு ??
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் செப் 28 ஆம் தேதி அன்று பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் முதண்மை கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஆலோசனை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
பள்ளிகள் திறப்பு !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு தற்போது சாத்தியம் இல்லை என்றும், அதற்கான சாத்தியக்கூறுகள் அமையவில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால் தமிழக பள்ளிகள் திறப்பானது மேலும் தாமதப்படும்.
ஆலோசனை !
தனியார் பள்ளிகளில் கட்டணம் முழுமையாக வசூலிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 15.3 லட்சம் மாணவர்கள் இதுவரை அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் செப் 28 ஆம் தேதி அன்று பள்ளிக்கல்வி இயக்குனர், செயலர் மற்றும் கமிஷனர் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்