பெற்றோர்கள் ஒப்புதல் கடிதம் அளித்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு அனுமதி !!
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இனி எப்போது பள்ளிகள் திறக்கும் என அனைவரிடமும் கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம் என்றும் அதேபோல் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பணிக்கு வரலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தின் படி பள்ளிக்கு மாணவர்கள் வரலாம் என்பது போல தெரிவிக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது மாணவர்களை சுயவிருப்பத்தின் பேரில் தான் அனுப்பிவைக்கிறோம் என்று பெற்றோர்கள் ஒப்புதல் கடிதம் எழுதி கையொப்பமிட்டு கடிதம் அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
இதற்கென்று பிரத்யேகமாக தலைமை ஆசிரியருக்கு தெரிவிப்பது போன்ற ஒரு கடிதத்தையும் உருவாக்கியுள்ளது. அதில் அக்டோபர் 1 முதல் பாடங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெற அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எனது சுயவிருப்பத்தின் பேரில் பள்ளிக்கு அனுப்பி வைக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கிறேன்’ என்று பெற்றோர்கள் ஒப்புக்கொண்டு கடிதம் அளித்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு அனுமதி என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனால் இது குறித்த எந்த தகவல்களும் இன்னும் பள்ளிக்கு அனுப்பவில்லை எனவும் அப்படி வரும்போது அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களை அனுமதிப்போம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்து தான் வருகின்றனர். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையே இன்னும் சில மாணவர்கள் வாங்க வரவில்லை’ என பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்