தமிழக பள்ளிகள் திறப்பு குறித்த அறிக்கை !!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கல்வி ஆண்டு துவங்கி 4 மாதங்கள் முடிந்த நிலையில் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வருகின்றனர்.
பின், தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சுயவிருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று கூறப்பட்டது.
அதே போல் வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால், கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவர் குழு ஆலோசனையில் முதலமைச்சர் பழனிசாமி இந்த அரசாணையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, “கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. எனவே பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு தான். ஒரு அளவிற்கு கொரோனா பரவல் குறைந்ததும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்