தமிழகத்தில் 10,11,12 பொதுத்தேர்வு குறித்து அமைச்சரின் புதிய அறிவிப்பு !!!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
பள்ளி பொதுத்தேர்வுகள் !
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10,11 மற்றும் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு சரியான காலத்தில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வுகளும் தொடங்கிவிடும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அந்த நடைமுறை மாறி விட்டது. கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பாடங்களை பயின்று வரும் நிலையில் அவர்களுக்கான பொதுத்தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அமைச்சர் புதிய அறிவிப்பு !!!
தமிழகத்தில் அடுத்த வருடம் தேர்தல் தொடங்க உள்ளதால் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது அதிக சிக்கல் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெற்றோர்கள் கூட்டத்திலும் பள்ளிகளை தாமதமாக திறக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதால் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிரமங்கள் உள்ளன. இதனால் தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் குறித்து ஒரு நிலைப்பாடு இல்லாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து டிசம்பரில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு டிசம்பர் மாதத்தில் தான் விடை கிடைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்