தமிழகத்தில் ரேஷன் கார்டு.. வங்கி கணக்கு எண் இணைப்பு – அரசின் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு – வங்கி கணக்கு:
தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலம் மக்கள், மாதாந்திர மளிகை பொருட்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூட்டுறவு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளர் ஊழியர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளார். அதில் ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை நகலெடுக்க வேண்டும்.
Amazon: 10,000 ஊழியர்கள் பணி நீக்கம்…மீண்டும் புதிய பணியாளர்களை நியமிக்க முடிவு!!
Exams Daily Mobile App Download
பிறகு இணையதளம் வாயிலாக ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு இணைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய கணக்கு திறக்கப்பட்டவுடன் அவர்கள் ரேஷன் கார்டு விவரங்களுடன் தங்களது வங்கி கணக்கு எண்ணை மாவட்ட பதிவாளருக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.