தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை – மக்களுக்கு அலர்ட் அறிவிப்பு!

0
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை – மக்களுக்கு அலர்ட் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பொழிய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கனமழை:

தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று காலை வெளியான தகவலின் படி தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 8 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு திடீர் அறிவிப்பு!

மேலும் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அதிகபட்ச மழை அளவான 6 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. கன மழை பெய்ய உள்ளதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!