தமிழக தனியார் பள்ளிகளில் கட்டண சலுகைகள் – பெற்றோர்கள் ஆர்வம்!!
வரும் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு பல புதிய சலுகைகளை பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
தனியார் பள்ளிகள்:
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக இறுதி தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் நேரடி முறையில் நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தியது. ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகள் முழு கல்விக்கட்டணத்தையும் வசூலிக்கத் தொடங்கியது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு தடை நீக்கம் – அரசுக்கு கோரிக்கை!!
இதனால் பெற்றோர்கள் அரசிடம் முறையிட்டனர். பெற்றோர்களின் முறையீட்டை கவனத்தில் கொண்டு அரசு தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன்படி, தனியார் பள்ளிகள் மொத்த கல்வி கட்டணத்தில் 75% மட்டுமே வசூலிக்க உத்தரவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சனையாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.
புதிய சலுகைகள்:
இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு பல புதிய சலுகைகளை வழங்கியுளளது. வழக்கமாக தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு முன்பாக நன்கொடை வசூலிக்கப்படும். அதை தவிர கல்வி, சீருடை கட்டணம், கல்வி சார் இணை பயிற்சிகளுக்கு தனி கட்டணம் என பல கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!!
தற்போது புதிய கல்வி ஆண்டில் சேர்க்கை கட்டணம் மற்றும் நன்கொடை வேண்டாம் என்று அறிவித்துள்ளது. ஒரு சில பள்ளிகளில் மாணவர்களை மட்டும் முதலில் சேருங்கள். கட்டணத்தை பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இந்த அறிவிப்புகளினால் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்