தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்க பணம் – வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வரவிருக்கும் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்க பணமும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு இலவச பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் அரசு பரிசுத்தொகுப்பை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால் இதுவரை அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போதைய தகவலின் படி 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூபாய் 1000 ரொக்க பணத்தையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் – உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு!
Exams Daily Mobile App Download
2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது மக்கள் ரொக்க பணத்தை அதிகம் எதிர்பார்த்தனர் ஆனால் அரசு ரொக்க பணம் ஏதும் வழங்கவில்லை. நடப்பாண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதனால் ரொக்க பணத்தை அரசு வங்கி கணக்கில் வர வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.