TN MRB தமிழக மருத்துவத் துறையில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – 209 காலிப்பணியிடங்கள்..!
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN MRB) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Dark Room Assistant பணிக்கு என்று மொத்தமாக 209 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tamil Nadu Medical Services Recruitment Board (TN MRB) |
பணியின் பெயர் | Dark Room Assistant |
பணியிடங்கள் | 209 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TN MRB காலிப்பணியிடம்:
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Dark Room Assistant பணிக்கு என்று மொத்தமாக 209 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.
TN MRB கல்வித் தகுதி:
- Dark Room Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Science பிரிவில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
- மேலும் Dark Room Assistant course தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
TN MRB வயது வரம்பு:
01.07.2022ம் தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என தெரிவித்துள்ளது.
TN MRB ஊதிய விவரம்:
இப்பணிக்கு என தேர்வாகும் நபர்கள் பணியின் போது மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள்.
TN MRB தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
TN MRB விண்ணப்ப கட்டணம்:
SC / SCA / ST / DAP(PH) / DW – ரூ.300/-
மற்றவருக்கு – ரூ.600/-
TN MRB விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். விண்ணப்பிக்க 05.04.2022ம் தேதி வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.