தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்த ஒரு வாரம் அவகாசம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு மேலும் ஒரு வாரம் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கலந்தாய்வு:
தமிழக அரசின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 4 முதல் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை முடிந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவர்களுக்கான நேரடி வகுப்புகள் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
தமிழகத்தின் 43வது தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமனம்?? முதல்வர் திட்டம்!!
இந்நிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான, தமிழக அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் போன்றவற்றில் மீதமுள்ள காலியாக உள்ள இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற அறிவிப்பின்படி, தமிழக்தில் காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களும், 459 பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்களும் நிரப்ப கலந்தாய்வு மேலும் ஒரு வாரம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்