தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000.. பொங்கல் முடிந்து வெளியாகுமா அறிவிப்பு? மக்கள் எதிர்பார்ப்பு!
தமிழக அரசு இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 குறித்த அறிவிப்பை விரைவில் செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
சிறப்பு அறிவிப்பு:
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது. அதனை தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த உடன் தங்களின் வாக்குறுதிகளை அரசு படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நலன் அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களும் மக்களின் வரவேற்பை பெற்றது. அதேபோல், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அரசு எப்போது செயல்படுத்தும் என்று தமிழக மக்கள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக அரசு அதிக அளவிலான நிதி சுமையில் இருப்பதால், இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும், அரசின் நிதி நிலை சென்றடைந்த உடன் விரைவில் மகளிருக்கான உரிமை தொகை திட்டம் அமலுக்கு வரும் என்று பதில் அளித்தது. இந்நிலையில், தற்போது 2023ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி தொடங்கிய நிலையில், அரசின் பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும், குறிப்பாக, ரூ.1,000 உரிமைத்தொகை மற்றும் பழைய பென்ஷன் திட்டம் அமல் குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்படும் என்று மக்கள் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
அதேபோல், சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கடந்த ஆட்சியை காட்டிலும் திமுக அரசு ரூ.4,000 கோடி கடன் தொகையை குறைவாக வாங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் அரசின் நிதி சுமை குறைந்திருக்கும் என்பதால், கட்டாயம் சிறப்பு அறிவிப்புகள் பொங்கலையொட்டி சட்டமன்ற கூட்டத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் சட்டமன்ற கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளார். இதனால் மக்களுக்கான அறிவிப்புகள் வெளியாக கால தாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது.