தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 1 லட்சம் பேருக்கு பணி கிடைத்து உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்கிற தகவல் குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கில் அரசு சார்பில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மேலும் தனியார் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெறுவதற்கு அரசு சார்பில் இணையதளமும் துவக்கப்பட்டு உள்ளது. நேற்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தேர்வான 1240 பேருக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வழங்கினார்.
ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்திற்கு 4 நாட்கள் வேலை – மத்திய அரசு திட்டம்!!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இந்த அரசு பொறுப்பேற்கும் போது குறைந்தது 10 லட்சம் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 24 ஆயிரம் பணியிடங்களுக்கு 10,121 பேர் மட்டுமே பங்கேற்று உள்ளனர். மேலும் புதிதாக துவங்கப்பட்டு உள்ள ஆயத்த ஆடை பூங்காவில் 7,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணி கிடைத்துள்ளது. மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்கிற தகவல் தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பிரதமருக்கு கடிதம் எழுதுவார் என தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்