அரசின் உயிர் காக்கும் திட்டம் – 2 லட்சம் பேர் பயன்.. தமிழக முதல்வர் வெளியிட்ட பதிவு!
தமிழகத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்னுயிர் காப்போம்:
தமிழகத்தில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” என்ற திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெறும் நபர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணம் இன்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ செலவுக்காக ரூ .1 லட்சம் வழங்கப்படும்.
தொடரும் கனமழையால் வீரியமடையும் டெங்கு காய்ச்சல் – பொதுமக்களே உஷார்!!
இந்த திட்டத்தின் கீழ் அண்மையில் 2 லட்சமாவது பயனாளி சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2008 ம் ஆண்டிலேயே ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியவர் முன்னாள் முதல்வர் கலைஞர். தமிழகத்தில் அதிக அளவில் ஆம்புலன்ஸ் சேவைகள் இருந்தாலும் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனை தடுக்கும் நோக்கில் இந்த இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டதாகவும். சாலை விதிகளை பின்பற்றி பயணிக்கவும் அறிவுறுத்தினார்.