தமிழகத்தில் பிப்ரவரி 2022 வரை அனைவருக்கும் ‘இது’ கட்டாயம் – சுகாதாரத்துறை செயலர்!
தமிழகத்தில் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிந்து தான் வெளியில் செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
முகக்கவசம் கட்டாயம்:
நாடு முழுவதும் கொரோனா என்னும் பெருந்தொற்றால் பாதிப்படைந்துள்ளது. இதனால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவினால் நாம் அனைவரும் பல்வேறு விதமான கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளோம். தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. அதன்படி கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையானது நாடு முழுவதும் 11 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் இந்தியா இதுவரை 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியர்களுக்கு 3% DA உயர்வு – அரசு ஒப்புதல்? இன்று அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மட்டும் 5.4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 5.14 கோடி அரசு மூலமாகமும், 26 லட்சம் தடுப்பூசி தனியார் மருத்துவமனை மூலமாகவும் செலுத்தப்பட்டுள்ளது. அதனால் அரசு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது. அவ்வாறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது நம் கடமை. அதனால் மக்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால் மக்கள் அதனை பின்பற்றுமாறு தெரியவில்லை. அதனால் இன்னும் சில பகுதிகளில் இந்த பெருந்தொற்று பரவுதல் அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது. தற்போது பண்டிகை மற்றும் பருவமழை வேறு தொடங்கியுள்ளது.
மேல்நிலை பொதுத்தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – அரசுத் தேர்வுகள் இயக்ககம்!
இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சாதாரணமாகவே மழைக் காலங்களில் நோய்த்தொற்று அதிக அளவில் பரவும். அதனால் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களிடம் அச்சம் நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் மக்கள் பல்வேறு இடங்களில் கூட்டம் சேர்ந்து இருக்கும் நிலை உருவாகின்றது. அதனால் குறைந்தது பிப்ரவரி 2022 மாதம் வரை மட்டுமாவது நாம் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.