தமிழக அரசு போக்குவரத்து துறையில் 400 பணியிடங்கள் நியமனம் – ஒப்பந்த ஓட்டுனர்கள் வேலை!
தமிழக அரசின் போக்குவரத்து துறையில் ஓப்பந்த அடைப்படையில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனங்களிடம் டெண்டர் பெறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் பணியிடங்கள்:
அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அவசர பயணங்களை கூட மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க அரசு தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கியது. இதனால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.
நாட்டின் தினசரி பாதிப்பு 4,000 ஐ கடந்து புதிய உச்சம் – தீவிரமாகும் நடவடிக்கைகள்!
அதன்பின்னர், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது போக்குவரத்துக்கு துறையில் காலியாக உள்ள 400 ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னை, கும்பகோணம் போன்ற பல வழித்தடங்களில் நியமிக்க உள்ள இந்த பணியிடங்களை நிரப்ப 4 நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொண்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download