அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை – பள்ளிகள் திறப்பு உறுதியா ???
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற இருப்பதாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.
அரசு பள்ளிகளில் வகுப்பு வாரியாக மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. அதாவது 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்றும், மேல்நிலை வகுப்புகளுக்கு வரும் 24 ஆம் தேதி அன்றும் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பிற்கு தற்போது சாத்திய கூறு இல்லை என்றும், இதனால் மாணவர் சேர்க்கை மட்டும் தற்போது நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையும் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட இருக்கிறது.
கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பள்ளிகள் திறப்பிக்கு தற்போது எந்த முடிவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |