பழங்குடியினர் சான்றிதழ் குறித்த முக்கிய அறிவிப்பு – தமிழக அரசு வெளியீடு!!
தமிழகத்தில் உள்ள நாடோடி மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மக்களை நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைப்பது தொடர்பாகவும், அவர்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்குவது தொடர்பாகவும் அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பழங்குடியினர் சான்றிதழ்
தமிழகத்தில் வசித்து வரும் நாடோடி மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்ற மத்திய அரசாங்கம் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியின மக்கள் பட்டியலில் 37 ஆவது இனமாக சேர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில், நரிக்குறவன், குருவிக்காரன் என்ற வார்த்தை உபயோகத்தை நரிக்குறவர், குருவிக்காரர் என்று மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுப்பு நாட்கள் – பட்டியல் வெளியீடு!
இதற்கான பணிகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில், வரும் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்பட இருப்பதால், அதற்கு முன்னதாக பழங்குடியினர் சான்றிதழை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளது. இப்போது, மத்திய அரசு திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட்ட பிறகு தமிழக அரசும் அதனை திரும்ப வெளியிடும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.