தமிழகத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ‘நகர்ப்புற வேலைவாய்ப்பு’ திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் முயற்சியாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மீண்டும் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சியில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ‘நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Accenture நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான அரிய வாய்ப்பு!
கடந்த 2015-ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் 38% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நகரத்தில் உள்ள ஏழை மக்களை திறனற்றவர்கள், பாதி திறன் உடையவர்கள், முழு திறன் உடையவர்கள் என்று 3 ஆக பிரித்து வேலை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்பட்டு அவரவர் திறனுக்கேற்ற அப்பகுதி அமைப்புகள் மூலம் வேலை அளிக்கப்படும்.
செப்.20ம் தேதி 10 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த திட்டத்தில் நகரங்களில் உள் கட்டமைப்பை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், பசுமையாக்கல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் போன்ற பணிகளை தினக்கூலி முறையில் வழங்கப்படும். சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்கள், 14 மாநகராட்சிகளிலும் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது என்றும் தமிழக அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. இதில் சிறப்பம்சமாக பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.